Thursday, Jun 26, 2025

இமான் அண்ணா மன்னிச்சுருங்க; இதுதான் காரணம் - ஓப்பனாக பேசிய சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Tamil Cinema D Imman
By Sumathi a year ago
Report

இமானிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

imman - sivakarthikeyan

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். எஸ்.கே. 23 என்ற ஒர்க்கிங் டைட்டிலின் கீழ் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றமாட்டேன்.

அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். அந்த துரோகம் குறித்து சிவகார்த்திகேயனிடமும் நான் நேராகவே கேட்டுவிட்டேன் என இமான் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சம்பளம் கூட வேண்டாம்; ஆனால், சிவகார்த்திகேயன் கூட முடியாது - ஸ்ட்ரிக்டா சொன்ன முன்னணி நடிகை!

சம்பளம் கூட வேண்டாம்; ஆனால், சிவகார்த்திகேயன் கூட முடியாது - ஸ்ட்ரிக்டா சொன்ன முன்னணி நடிகை!

இமானிடம் மன்னிப்பு

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் இதுகுறித்து சிவகார்த்திகேயன் வாய்திறக்கவில்லை. இந்நிலையில். இமானிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்ட பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில், "நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அது இமான் அண்ணாவிடம்தான் கேட்க வேண்டும்.

இமான் அண்ணா மன்னிச்சுருங்க; இதுதான் காரணம் - ஓப்பனாக பேசிய சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan Apologized To Imman

ஏனெனில் நான் கொஞ்சம் படங்களில் பிஸியாக இருக்கிறேன். அதனால் அவரை பார்க்க முடியாமல், பேச முடியாமல் இருக்கிறது. நாங்கள் இரு குடும்பமும் ஒன்றாக சாப்பிட போவோம். இப்போது அது நடப்பது இல்லை. நாங்கள் அவ்வாறு செல்லாதது இமான் அண்ணாவுக்கும் அப்செட் ஆக்கிடுச்சு.

நான் அவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன். அவரும் என்னை தம்பி என்றுதான் கூப்பிடுவார். அது ஒரு ஜெனியூனான ரிலேஷன்ஷிப். எந்த ஒரு ஈகோவும் எங்களுக்குள் இருக்காது.

அதேபோல் அவர் மீது எப்போதும் எனக்கு அண்ணன் என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் ஏதாவது ஒரு பாடலில் திருத்தம் சொன்னால்கூட நான் பயந்துகொண்டேதான் அவரிடம் சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.