நான் அடுத்த தளபதியா? மேடையில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Vijay Tamil Cinema
By Swetha Sep 30, 2024 06:30 AM GMT
Report

அடுத்த தளபதி நானா ? என்பது பற்றியும் சிவகார்த்திகேயன் ஓபனாக பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் பட ரிலீஸில் தீவிரமாக உள்ளார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது,

நான் அடுத்த தளபதியா? மேடையில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்! | Sivakarthikeyan About Next Thalapathy Controversy

ஆனால் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் முற்றிலும் தன் பாணியில் இருந்து விலகி அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.

மறைந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க சீரியஸான படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றது.

இமான் அண்ணா மன்னிச்சுருங்க; இதுதான் காரணம் - ஓப்பனாக பேசிய சிவகார்த்திகேயன்

இமான் அண்ணா மன்னிச்சுருங்க; இதுதான் காரணம் - ஓப்பனாக பேசிய சிவகார்த்திகேயன்

அடுத்த தளபதி?

அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்,சிவகார்த்திகேயன் தனது அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேஷியா சென்றுள்ளார்.

நான் அடுத்த தளபதியா? மேடையில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்! | Sivakarthikeyan About Next Thalapathy Controversy

அப்போது அங்கு மேடையில் பேசிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை பார்த்து, 'அடுத்த தளபதி' என ரசிகர்கள் கோஷமிட்டனர். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் "ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரு உலகநாயகன் தான், ஒரே சூப்பர்ஸ்டார் தான்.

இந்த அடுத்த என்கிற வார்த்தைக்கு எல்லாம் இடமே கிடையாது. இவர்கள் அனைவரையும் பார்த்து தான் நான் சினிமாவிற்கு வந்தேன், அவர்களை போல் படங்களை ஹிட் கொடுக்கலாம். ஆனால், அவர்களை போலவே ஆகவேண்டும் என நினைப்பது சரி கிடையாது" என பேசியுள்ளார்.