எங்களை ஏமாத்திட்டாங்க... நடிகர் பிரபு மீது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Prabhu Sivaji Ganesan
By Nandhini Jul 07, 2022 06:21 AM GMT
Report

நடிகர் சிவாஜி

தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும், இன்றும் என்றும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றவர்தான் நடிகர் சிவாஜி கணேசன்.

இவர் பராசக்தி', 'பாசமலர்', 'கர்ணன்', 'தில்லானா மோகனாம்பாள்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', 'மனோகரா' என பல வெற்றிப்படங்களில் இவருடைய நடிப்பை மிஞ்ச ஆளில்லை.

சிவாஜி கணேசன் கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். சென்னையில் நடிகர் சிவாஜியின் பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உள்ளது.

உயர்நீதிமன்றத்தில் சகோதரிகள் வழக்கு

இந்நிலையில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

அந்த வழக்கு மனுவில், தங்களுடைய தந்தை சிவாஜி சம்பாதித்த சொத்து தொடர்பாக அவர் உயில் எழுதி வைக்கவில்லை. பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து எங்களை ஏமாற்றி விட்டனர். எங்களின் தாய் வழி சொத்துக்களையும் அவர்கள் பங்கு கொடுக்காமல் எங்களை ஏமாற்றியுள்ளனர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.    

Sivaji Ganesan - prabhu

ஆற்றில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய குட்டியானை - வைரலாகும் வீடியோ