பூப்பறித்து கொண்டு இருந்த அக்கா, தம்பி.. கழுத்தை அறுத்து கொலை - அதிர்ச்சி பின்னணி!

Tamil nadu Crime Death Salem Murder
By Swetha Oct 15, 2024 09:16 AM GMT
Report

அக்கா தம்பி என இரண்டு சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை 

சேலம் மாவட்டம் தும்பல்பட்டியை சேர்ந்தவர் ராஜா(45) இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் இருந்தன. விவசாயியான ராஜா அப்பகுதியில் ஒரு விவசாயத்தோட்டம் வைத்திருந்தார்.

பூப்பறித்து கொண்டு இருந்த அக்கா, தம்பி.. கழுத்தை அறுத்து கொலை - அதிர்ச்சி பின்னணி! | Sister And Brother Was Killed By There Relative

இந்த நிலையில், அந்த தோட்டத்தில் நேற்று இரவு ராஜா, அவரது மகள் மற்றும் மகன் ஆகிய மூவரும் கழுத்து அறுக்கப்பட்டுக் கிடந்துள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்,

ராஜா கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி,மகன்,மகள் கழுத்தை ரம்பத்தை கொண்டு அறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்..!

மனைவி,மகன்,மகள் கழுத்தை ரம்பத்தை கொண்டு அறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்..!

பின்னணி

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜாவின் மகள் மற்றும் மகன் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூப்பறித்து கொண்டு இருந்த அக்கா, தம்பி.. கழுத்தை அறுத்து கொலை - அதிர்ச்சி பின்னணி! | Sister And Brother Was Killed By There Relative

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதில்,நேற்று ராஜா, அவரது மகன் மற்றும் மகள் மூவரும் தோட்டத்திற்குச் சென்று பூக்களை பறித்துகொணிருந்துள்ளனர்.

அப்போது ஒருவர் நபர் தோட்டத்திற்கு வந்து ராஜாவிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்ற ராஜாவின் மகளும், மகனும் அதனைத் தடுத்துள்ளனர். அப்போதுதான் அந்த நபர் கத்தியால் ராஜா,

அவரது மகன் மற்றும் மகள் ஆகிய மூவரின் கழுத்த அறுத்துள்ளார். குழந்தைகளும் அங்கேயே துடித்துடித்து இறந்துள்ளனர். ராஜா மட்டும் உயிருக்கு போராட அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.