குல்தீப் யாதவின் கழுத்தை கோபமாக பிடித்த சிராஜ்: வைரலாகும் வீடியோ காட்சிகள்- நடந்தது என்ன?
சென்னை முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் போது டிரெஸ்ஸிங் ரூமில் குல்தீப் யாதவின் கழுத்தை முகமது சிராஜ் கோபமாக பிடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 578 ரன்கள் எடுத்துள்ளது. இதனிடையே குல்தீப் யாதவிடம், முகமது சிராஜ் நடந்து கொள்ளும் விதம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதல் நாள் ஆட்ட நேரம் முடிந்து இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பினார். அப்போது சிராஜ் குல்தீப் யாதவ்வின் கழுத்தை வேகமாக பிடித்து இழுத்தார். இந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படமால் இருப்பதால் விளையாட்டாக இருவரும் சண்டை போட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.