சென்னைக்கு வருகை தந்தார் தல தோனி..அடுத்த வாரம் சின்ன தல வருகை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சிக்காக சென்னை வருகை தந்துள்ளார். ஐபிஎல் 2021 ஆண்டுக்கான போட்டிகள் இடம், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெயக்வாட் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
மேலும் தனிமை படுத்தப்படும் வீரர்கள் அனைவருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணியின் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னா அடுத்த வாரம் பயிற்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.