நள்ளிரவு விருந்தில் போதைப் பொருள் : பிரபல பாலிவுட் நடிகையின் அண்ணன் கைது

By Irumporai Jun 13, 2022 07:44 AM GMT
Report

பெங்களூரில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதியில் போதைப்பொருள்

பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் நடந்த விருந்தில், பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணனான சித்தாந்த் கபூர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இவர் உட்பட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் எம்.ஜி. சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு பெங்களூர் காவக்துறை நடத்தியசோதனையில் அதில் பங்கேற்றவர்கள் போதைப் பொருள் உபயோகித்தது தெரியவந்தது.

ஷ்ரத்தா கபூரின் அண்ணன்

இதில் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணனான சித்தாந்த் கபூரும் ஒருவர். இவருக்கு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் போதைப்பொருள் உபயோகித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணனான சித்தாந்த் கபூர் உட்பட 6 பேரை பெங்களூர் காவல்துறை கைது செய்தது பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகை ஷ்ரத்தா அண்ணனுமானவர் சிந்தாந்த் கபூர் .

பிரபலமான இணையத் தொடர்களில் நடித்து பிரபலமானர், சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 

ஹெரோயின் போதைப்பொருள் பாவனையால் பறிபோன உயிர்!