ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கிரிமினல்; மன்னிப்பு கூட கேட்க முடியாது - முன்னாள் வீரர் விளாசல்

Shreyas Iyer Punjab Kings Royal Challengers Bangalore IPL 2025
By Sumathi Jun 05, 2025 12:50 PM GMT
Report

ஷ்ரேயாஸ் ஐயர் செய்தது கிரிமினல் குற்றம் என யோக்யராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் 

2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,

shreyas iyer

ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முன்னதாக குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தை வென்று கொடுத்தார். ஆனால் இறுதிப் போட்டியில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

ஏமாற்றமா இருக்கு; திருப்புமுனையே அதுதான் - ஸ்ரேயாஸ் ஆதங்கம்

ஏமாற்றமா இருக்கு; திருப்புமுனையே அதுதான் - ஸ்ரேயாஸ் ஆதங்கம்

யோக்ராஜ் விமர்சனம்

இது தொடர்பாக பேசிய அவர், ”இந்த இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த ஷாட் ஒரு கிரிமினல் குற்றம் என்று நான் நினைக்கிறேன். பிரிவு 302 இன் கீழ் வரும் இந்த கிரிமினல் குற்றத்தைப் பற்றி அசோக் மன்கட் என்னிடம் கூறினார்.

yograj singh

இதன் விளைவுகள் என்னவென்றால், நீங்கள் இரண்டு போட்டிகளுக்கு தடை செய்யப்படுவீர்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார். நேற்று ஷ்ரேயாஸ் செய்தது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.