ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் - நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 11 பேர் பலி!

Royal Challengers Bangalore Bengaluru Death IPL 2025
By Sumathi Jun 04, 2025 12:47 PM GMT
Report

ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி வெற்றி பெற்றதில் இருந்து ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமடைந்து பட்டாசுகளை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் - நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 11 பேர் பலி! | Rcb Victory Parade 11 Death At Bengaluru

தொடர்ந்து இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் அருகே கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் பேரணிக்கும் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏமாற்றமா இருக்கு; திருப்புமுனையே அதுதான் - ஸ்ரேயாஸ் ஆதங்கம்

ஏமாற்றமா இருக்கு; திருப்புமுனையே அதுதான் - ஸ்ரேயாஸ் ஆதங்கம்

11 பேர் பலி

ஆனால் அந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேரணி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து விமான நிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உற்சாகத்துடன் பூங்கொத்து வழங்கி பெங்களூர் அணியினரை வரவேற்றார்.

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் - நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 11 பேர் பலி! | Rcb Victory Parade 11 Death At Bengaluru

அதன்பின் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்து வீரர்கள் வருகை தந்தனர். ஏற்கனவே அங்கு ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தினர்.

இதில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.