பிரதமரை கண்டுக்காத ஷ்ரேயாஸ் ஐயர்...பிளான் போட்டு தூக்கிய ஜெய் ஷா..?

Shreyas Iyer Narendra Modi
By Karthick Feb 29, 2024 03:15 AM GMT
Report

இந்தியா அணியின் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அணி ஒப்பந்தம்

ஆண்டு தோறும் 3 பிரிவுகளில் இந்தியா அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலும் அவர்களுக்கான ஆண்டு சம்பளம் குறித்த தகவல்களும் வெளிவரும்.

shreyas-iyer-has-been-withdrawn-from-indian-team

இந்த ஆண்டு அப்படி வெளிவந்துள்ள பட்டியலில் இந்தியா அணியின் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஷ்ரேயஸ் ஐயருக்கு ஒருவருட தடை..? மற்ற வீரர்களுக்கான முன்எச்சரிக்கையா..?

ஷ்ரேயஸ் ஐயருக்கு ஒருவருட தடை..? மற்ற வீரர்களுக்கான முன்எச்சரிக்கையா..?

பிசிசிஐ அறிவுறுத்திய ரஞ்சி தொடரில் விளையாடாமல் இருவரும் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கான நடவடிக்கையாக அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜெய் ஷா பிளான்..?

இவர்களில் ஷ்ரேயஸ் ஐயரின் நீக்கத்திற்கு மற்றோரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, இந்தியா அணி கடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து வீரர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பிரதமர் மோடி வருகை தந்த போது, ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் பிரதமர் மோடி வந்ததை விரும்பாத வகையில் உடல் மொழியில் வெளிகாட்டியதாக அப்போவே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

shreyas-iyer-has-been-withdrawn-from-indian-team

அதன் அடிப்படையில் தான் பிசிசிஐ'யின் தலைவர் ஜெய் ஷா ஷ்ரேயஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியிருக்க கூடுமே என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த கருத்தை பலரும் ஏற்கவில்லை என்பதே நிதர்சனம்.