Friday, Jun 6, 2025

வாகை சூடு விஜய்..! அரசியல் கட்சி தொடங்கிய மகன் - உருக்கமாக பேசிய தாய் ஷோபா!

Vijay Tamil Cinema Tamil nadu Thalapathy Vijay Makkal Iyakkham Tamil Actors
By Jiyath a year ago
Report

அரசியல் கட்சி தொடங்கிய மகன் விஜய்க்கு, தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழக வெற்றி கழகம் 

நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

வாகை சூடு விஜய்..! அரசியல் கட்சி தொடங்கிய மகன் - உருக்கமாக பேசிய தாய் ஷோபா! | Shoba Chandrasekar Wishes Vijays Political Party

அதன்படி கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை.

அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் தாயாரும், பின்னணி பாடகியான ஷோபா சந்திரசேகர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல்‌ எனக்கு பொழுதுபோக்கல்ல..! சினிமாவிலிருந்து விலகும் விஜய்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அரசியல்‌ எனக்கு பொழுதுபோக்கல்ல..! சினிமாவிலிருந்து விலகும் விஜய்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தாய் ஷோபா வாழ்த்து 

அவர் கூறுகையில் "விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு ஒரு அம்மாவாக மட்டுமல்லாமல், சமூக பொறுப்புள்ள பெண்மணியாகவும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

வாகை சூடு விஜய்..! அரசியல் கட்சி தொடங்கிய மகன் - உருக்கமாக பேசிய தாய் ஷோபா! | Shoba Chandrasekar Wishes Vijays Political Party

அத்தனை குடிமக்களின் அபிமானத்தை பெற்ற விஜய் மாதிரியான ஆளுமைக்கு அரசியலில் நுழைய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. புயலுக்கு பின் அமைதி என்று சொல்வார்கள். ஆனால் விஜய்யின் அமைதிக்கு பின்னால் ஒரு அரசியில் புரட்சி நிச்சயம் இருக்கிறது. என்ன இருந்தாலும் பையனுக்கு ஒட்டு போடப்போகும் அம்மாவாக எனக்கு ஒரு தனி சந்தோஷம் இருக்கிறது. ' தமிழக வெற்றி கழகம்" என்ற பெயருக்கு ஏற்றவாறு தமிழகத்தில் வெற்றி பெரும்.

முக்கியமாக ஜாதி, மதம் இதிலெல்லாம் விஜய்க்கு விருப்பம் கிடையாது. அவருக்கு பின்னால் நிற்கும் அனைவரும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பார். அவரின் ரசிகர்கள் இன்று தொண்டர்களாக மாறியுள்ளனர். கூடிய விரைவில் தலைவராகவும் மாறப்போகிறார்கள். வாகை சூடு விஜய்..! என்று தெரிவித்துள்ளார்.