அம்பானி மருமகளிடமிருக்கும் உலகின் மிக விலையுயர்ந்த வைர நெக்லஸ் - என்ன ஸ்பெஷல்?
முகேஷ் அம்பானியின் மூத்த மருமகளிடம் உலகிலேயே மிக விலையுயர்ந்த வைர நெக்லஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்லோகா மேத்தா
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா. இவர் ரோஸி புளூ வைர நிறுவனத்தின் உரிமையாளர் ரஸ்ஸல் மேத்தாவின் மகளாவார். ஆகாஷ் அம்பானியும் இவரும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
அதில், நீதா அம்பானி தனது மருமகளுக்கு இந்த விலை உயர்ந்த வைர நெக்லஸை திருமணப் பரிசாக அளித்திருக்கிறார். ஒரு மிகப்பெரிய வைரக் கற்களுடன் 91 வைரக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வைர நெக்லஸ்
லெபானீஸ் நகை வடிவமைப்பாளர் மௌவாத் இதனை வடிவமைத்திருக்கிறார். இந்த நெக்லஸில் இடம்பெற்றிருக்கும் வைரக்கற்களின் வடிவமைப்புகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்றும், இதைப் போல ஒரு வைர நெக்லஸை உருவாக்கவே இயலாது என்றும் கூறப்படுகிறது.
உலக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. நெக்லஸ் எல் இன்கம்பேரபிள் என்ற பெயர் கொண்டது. இந்த நகையின் மொத்த விலை ரூ 500 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.