நடிச்சதெல்லாம் போதும்.. மூட்டை கட்டி வை - சூர்யாவிடம் கொந்தளித்த சிவக்குமார்!

Sivakumar Suriya Tamil Cinema
By Sumathi Apr 20, 2024 09:50 AM GMT
Report

நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் குறித்த பதிவு கவனம் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா

செல்வன் அன்பு என்பவர் சூர்யா குறித்த பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் சூர்யா 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமானார்.

suriya - sivakumar

படம் பெரிய கிரேட் சக்சஸ்லாம் கிடையாது. சந்திப்போமோ, உயிரிலே கலந்தது எல்லாம் பெரிய வெற்றி பெறவில்லை.சிவக்குமார் மகனை ஒதுக்கி விட்டார்களே என அப்பாவுக்கு ஆதங்கம். அப்போது விஜய்காந்த் சூர்யாவுக்காக நடித்துக் கொடுத்த 'பெரியண்ணா' 1999 ஏப்ரல் 14 தமிழ் வருடப் பிறப்பில் ரிலீசானது.

சிவக்குமார் கறாராக சொல்லிவிட்டார் சூர்யாவிடம். 'சரவணா... சினிமாவெல்லாம் மூட்டை கட்டிட்டு சிஏ பண்ணி வாழ்க்கையிலே முன்னேறப்பாரு. உன்னால எனக்கும் கெட்ட பெயர்.. ஃப்ரண்ட்ஸ் என்கிற டைட்டிலுக்கு ஏற்ற நடிகர், சூர்யா என எண்ணி இயக்குனர்கள் சித்திக், அப்பச்சன், சேகர் மூவரும் சிவக்குமார் வீட்டுக்கு போகிறார்கள்.

ஜோதிகாவை துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகர் - நெருங்க விடாமல் கூடவே சென்ற நடிகர் சூர்யா

ஜோதிகாவை துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகர் - நெருங்க விடாமல் கூடவே சென்ற நடிகர் சூர்யா

தாய் செய்த செயல் 

அவன் நடிக்கவே வேண்டாம். கிரிக்கெட் விளையாட போயிருக்கான். இத்தனை நாள் நான் கட்டி வைத்திருந்த பெயரெல்லாம் போயிடும் போல... .அவனை சி.ஏ படிக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் எனக் கூறியதால் அவர்கள் கிளம்பியுள்ளனர்.

suriya with mother

அதன்பின், பின் பக்கமாக வீட்டின் முன்னால் வந்த சூர்யாவின் அம்மா சேகரிடம் 'தம்பிக்கு சினிமான்னா உயிர். நடிக்க தான் அவனுக்கு ஆசை... எப்படியாவது சான்ஸ் கொடுங்க' எனச் சொல்ல... இவர்கள் முகவரி கொடுத்து வரச் சொல்கின்றனர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விஜய்க்கு கோடிகளில் சம்பளம். சூர்யாவுக்கு Friendsல் வெறும் ஐந்து லட்சம் தான். அதை தரவில்லையென்றாலும் கூட புகார் சொல்லியிருக்கமாட்டார் எல்லோருக்கும் சூர்யா அம்மா போல் மனம் வருவதே மனித மனங்களில் நல்ல மாற்றம் எனத் தெரிவித்துள்ளார்.