அவன் இதை தெரிந்துக்கொள்வான் என நம்புகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்!
ஓய்வை அறிவித்த பின் மகன் குறித்து ஷிகர் தவான் உருக்கமாக பேசியுள்ளார்.
ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு வந்தவர் ஷிகர் தவான்(38). 2022க்கு பின் ஃபார்ம் இழந்தது மற்றும் உடற்தகுதி போன்ற காரணங்களால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவரது மனைவியுடன் விவாகரத்து ஆன நிலையில் மகனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மகன் குறித்து உருக்கம்
மகன் சோராவருக்கு 11 வயது ஆகிறது. இந்நிலையில் மகன் குறித்து பேசியுள்ள அவர், "சோராவருக்கு 11 வயதாகிறது. எனது ஓய்வு குறித்து அவன் தெரிந்து கொள்வான் என நம்புகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தை குறித்தும் அவன் தெரிந்து கொள்வான்.
என்னை ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும், ஒரு நல்ல மனிதராகவே சோராவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
நான் நல்ல விஷயங்களை செய்து, நல்ல மனிதர்களை என்னை சுற்றிலும் வைத்துக் கொண்டேன் என்பதாகவே அவன் என்னை குறித்து நினைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.