ரோஹித் எதிர்பார்ப்பதை செய்யாவிட்டால் அவ்வளவுதான் - ஷமி பகீர் பேச்சு!
ரோகித்தின் இன்னொரு முகம் குறித்து முகமது ஷமி பேசியுள்ளார்.
முகமது ஷமி
டி20 உலக கோப்பையை கைப்பற்றி இந்தியா சாதனைகள் படைத்தது. தொடர்ந்து, ரோகித் சர்மாவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியாட் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முகமது ஷமி, ரோகித் சர்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றால் அவர் நமக்கு முழு சுதந்திரத்தை அளிப்பார். ஆனால் அதே சமயம் அவருடைய எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்யவில்லை என்றால் அவ்வளவுதான்.
நீங்கள் தொலைக்காட்சியில் ரோகித் சர்மாவின் ரியாக்ஷனை அடிக்கடி பார்க்கலாம். அதை பார்த்த உடனே நாங்கள் ரோகித் சர்மா மனதில் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய போராடுவோம் என்றுத் தெரிவித்தார்.
ரோகித் சர்மா குணம்
இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்ரேயாஷ், ஷமி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ரோகித் சர்மா முகத்திற்கு நேராக எதையும் திட்ட மாட்டார். நாங்களே அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாடுவோம். சில சமயம் அவர் என்ன பேசுகிறார் யாரைக் குறை சொல்கிறார் என்பதை அவருடைய நடவடிக்கை வைத்து நாங்கள் புரிந்து கொள்வோம்.
அவருடன் நாங்கள் பல ஆண்டுகள் விளையாடி இருப்பதால் எங்களுக்கு இது எளிதாகி விட்டது எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய ரோஹித் சர்மா, தான் எப்போதுமே வீரர்களை நீங்கள் நீங்களாக இருங்கள் என்று கூறுவேன். அப்படி இருக்கும் போது நானும் நானாக இருந்தால் தானே சரியாக இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளார்.