வெறுப்பேற்றிய வீரர் - கிட் பேக்கை எட்டி உதைத்த கேப்டன் கூல் - போட்டுடைத்த CSK வீரர்
கேப்டன் கூல் என பெயர் வாங்கியிருக்கும் தோனி சில சமயங்களில் மைதானத்தில் கூட தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேப்டன் கூல்
Aggressive'வாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் பல வீரர்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக உள்ளனர். முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போதைய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் அவரது ஆக்ரோஷத்தால் மிகவும் பிரபலம் என்றால் அது நேர்மாறாக அமைதியுடன் ரசிகர்களை ஆட்டிவைப்பவர் தோனி.
பெரிதாக தனது மனஓட்டத்தை வெளிப்படுத்திடாத தோனி, அதன் காரணமாகவே கேப்டன் கூல் என்ற பட்டத்திற்கும் சொந்தக்காரராக இருக்கின்றார். அவரை போன்று இளம் வீரர்கள் மைதானத்தில் எமோஷனை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என பல சீனியர் வீரர்கள் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.
அப்படி இருக்கும் தோனி சில சமயங்களில் மைதானத்திலேயே தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய சம்பவங்களும் உண்டு. அதே போல தான், வீரரின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவர், ட்ரெஸ்ஸிங் ரூமில் செய்த காரியம் பற்றி csk அணியின் முன்னாள் வீரர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விரக்தி
சென்னை அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி, 2018-ஆம் ஆண்டு கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஷேன் வாட்சன். அவர் இது குறித்து பேசியது வருமாறு,
ஒரேயொரு முறை தான் தோனி விரக்தியடைந்து பார்த்திருக்கிறேன் என்றும் அந்த தருணத்தை என் வாழ்வில் மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக இறுதி போட்டியில் மலிங்கா வீசிய கடைசி பந்தில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்த நிலையில்,
ஓய்வறையில் நின்றிருந்த தோனி, எதிரில் இருந்த கிட் பேக்கில் காலினை எட்டி உதைத்து விரக்தியை வெளிப்படுத்தினார் என்று கூறினார் ஷேன் வாட்சன்.