16 வருட CSK'யில் dressing room'ல மிகவும் கஷ்டப்படுத்தியது இவர் தான்..? முதல் முறை மனம்திறந்த தோனி

Karthick
in கிரிக்கெட்Report this article
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
16 வருட ஐபிஎல் தொடரில் பெரிதும் ஆதிக்கம் செலுத்திய அணி என்றால் அது சென்னை அணி தான். அதிக முறை கோப்பையை சென்னையை போலவே மும்பை அணி வென்றிருந்தாலும், அதிக முறை இறுதி போட்டியில் விளையாடியது, Play Off சுற்றிற்கு தகுதி பெற்றது என பல தொடர் சாதனைகளை சென்னை அணி தன் வசமே வைத்துள்ளது.
ஒவ்வொரு முறை பல்வேறு விதமான விமர்சனங்கள் வரும் போதும், அதனை மீறி சென்னை அணி வெற்றி பெற்று விமர்சனங்களின் வாயை அடைத்து விடுகிறது.அதற்கு முக்கிய காரணமாக இருப்பது சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளேம்கிங்.
2008-ஆம் ஆண்டு முதல் அணியிலேயே நீடிக்கும் இவர்கள் தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து அணியின் வெற்றிக்கு வழி வகை செய்து வருகிறார்கள். அது இம்முறையும் நீடிக்கும் என்றே ரசிகர்கள் நம்புகின்றனர். தனது 14 வருட சென்னை அணியுடனான பயணத்தில் தனக்கு மிகவும் சவாலாக இருந்தவர்கள் இவர்கள் 5 பேர் தான் தோனி சிலரை குறிப்பிட்டுள்ளார்.
சவாலாக
இது குறித்து அவர் பேசும் போது, “பல வெளிநாட்டு வீரர்களை புரிந்து கொள்வதற்கு ஐபிஎல் உதவி செய்தது என குறிப்பிட்டு, எதிரணி வீரர்களுடன் அதிகம் பேசியவன் கிடையாது என்றும் ஆனால் மற்ற வீரர்களை தெரிந்து கொள்ளவும் அவர்கள் கிரிக்கெட் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்றும், அவர்களின் கலாச்சாரத்தை அறியவும் தனக்கு ஐபிஎல் ஒரு வாய்ப்பைக் கொடுத்தது என்றார்.
2008 ஆம் ஆண்டு முதல் CSK அணியில் மேத்யூ ஹைடன், மைக் ஹசி,முத்தையா முரளிதரன், மகாய நெடினி மற்றும் ஜேக்கப் ஓரம் ஆகியோர் தான் ட்ரெஸ்ஸிங் ரூமில் புரிந்து கொள்வது பெரும் சவாலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.