அவங்களுக்கு ஷகிலா மாதிரி இருக்கும்னு நெனச்சு.. இனி பண்ணவே மாட்டேன் - பப்லு பிரித்விராஜ் பகீர்!

Tamil Cinema Shakeela Babloo Prithiveeraj Tamil Actors Tamil Actress
By Jiyath Dec 09, 2023 04:15 PM GMT
Report

இனிமேல் தனது தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் விவாதிக்க போவதில்லை என நடிகர் பப்லு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

பப்லு பிரித்விராஜ்

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்து தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பப்லு பிரித்விராஜ். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அவரை பிரிந்த பிரித்விராஜ் மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.

அவங்களுக்கு ஷகிலா மாதிரி இருக்கும்னு நெனச்சு.. இனி பண்ணவே மாட்டேன் - பப்லு பிரித்விராஜ் பகீர்! | Shakeela And Babloo Prithveeraj Interview

54 வயதான பிரித்திவிராஜ் 24 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்ட செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியது, பலரும் அவரை அவதூறாகவும் பேசி வந்தனர். ஆனாலும் இருவரும் ஒன்றாக ரீல்ஸ் வீடியோக்கள், யூடியூப் வீடியோக்கள் என பதிவிட்டு மகிழ்ச்சியகவே இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரித்விராஜ் - ஷீத்தல் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்விராஜ் பல நேர்காணல்களில் பேசி வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஷகிலாவுடன் நேர்காணல் ஒன்றில் பிரித்விராஜ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் "நீங்கள் தான் முதலில் உங்களுடைய தனிப்பட்ட ரகசியமான விஷயங்களை பொது பொதுவெளியில் போட்டு உடைத்தீர்கள். எனக்கு வயதாகிறது. அதனால் உடல் ரீதியான தேவை இருக்கிறது என ரகசியமான விஷயங்களை பொதுவெளியில் பேசினீர்கள்.

இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயன் Video; அடுத்த தலைவலி - அதிர்ச்சியில் திரையுலகம்!

இணையத்தில் லீக்கான சிவகார்த்திகேயன் Video; அடுத்த தலைவலி - அதிர்ச்சியில் திரையுலகம்!

பேட்டி 

அப்போது நீங்கள் இப்படி பேசியதன் காரணமாகத்தான் இப்போது நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்களா? என உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அப்போது பேசாமல் இருந்திருந்தால் தற்போது உங்களிடம் யாரும் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள்" என்று ஷகிலா கூறினார்.

அவங்களுக்கு ஷகிலா மாதிரி இருக்கும்னு நெனச்சு.. இனி பண்ணவே மாட்டேன் - பப்லு பிரித்விராஜ் பகீர்! | Shakeela And Babloo Prithveeraj Interview

இதற்கு பதிலளித்த பிரித்விராஜ் "நான் அனைவரையும் நம்பி விட்டேன். எல்லாருக்கும் மனசு ஷகிலா போல பெருசா இருக்குன்னு நம்பிட்டேன். ஆனால் அவரவர்கள் அவர்களுடைய எல்லையில் தான் சிந்திக்கிறார்கள். இப்போது தான் அதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசியது மிகப்பெரிய தவறு. 

ஆனால் உங்களுக்கு பெரிய மனது இருக்கிறது. அதுபோல எல்லோருக்கும் அப்படி இருக்கிறதா? என்றால் இல்லை. எனவே இனிமேல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் விவாதிக்க போவது கிடையாது" என்று பிர்த்விராஜ் பேசியுள்ளார்.