256 சிறுமிகள் உட்பட 299 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை - நாட்டையே அதிரவைத்த டாக்டர்
250க்கும் மேற்பட்ட சிறுமிகளை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மேற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜோயல் லெ ஸ்கௌர்னெக் (74). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது இரண்டு மருமகள்கள் உட்பட நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜோயலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதனையடுத்த தொடர் விசாரணையில், 1989ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான பணிக்காலத்தின் போது அவரிடம் சிகிச்சைக்கு வந்த 15 வயதுக்கு உட்பட்ட 256 சிறுமிகள் உட்பட மொத்தம் 299 பெண்களை ஜோயல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
டாக்டர் செய்த கொடூரம்
மயக்க மருந்தை பயன்படுத்தியும் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய பிறகும் பல பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜோயலுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து ஜோயல், `என் செயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன். அதனால், நான் மேல் முறையீடு செய்யக் கோரப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் செய்ய விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.