பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..சாலையில் இளம்பெண் செய்த துணிகர செயல்!
சாலையில் நடந்து சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பெங்களூரு சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 11-ந் தேதி இரவு கடைக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றுள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சாலையோரம் நடந்து சென்ற அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
பாலியல் வன்கொடுமை
அப்போது இளைஞரின் மோட்டார் சைக்கிளின் வாகன பதிவெண் பலகையை இளம்பெண் செல்போனில் படம் பிடித்திருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம்,தொடர்பாக அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது அந்த அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
