சுற்றுலா சென்ற பெண் வக்கீல் ஹோட்டலில் கதறல் - காங்கிரஸ் தலைவர் அத்துமீறல்

Sexual harassment Crime Dindigul
By Sumathi May 10, 2023 05:17 AM GMT
Report

சுற்றுலாவுக்கு வந்திருந்த பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறியதாக மவாட்ட காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துமீறல்  

சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த​வர் வழக்கறிஞர் ராஜசேகர். சென்னை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் மனைவி மீனாட்சி உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.

சுற்றுலா சென்ற பெண் வக்கீல் ஹோட்டலில் கதறல் - காங்கிரஸ் தலைவர் அத்துமீறல் | Sexual Harassment Tourist Congress Leader Arrested

இருவரும் தனது 2 மகன்கள், உறவின​ர்களான கயல்விழி, அவரின் 2 பெண் குழந்தைகள் ​என​ மொத்தம் ​6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

கைது

தொடர்ந்து சுற்றிப்பார்த்து விட்டு, மறுநாளும் வெளியே செல்ல திட்டமிட்ட நிலையில், மீனாட்சி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஹோட்டலிலேயே இருந்துள்ளார். ​கயல்விழி​ குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

சுற்றுலா சென்ற பெண் வக்கீல் ஹோட்டலில் கதறல் - காங்கிரஸ் தலைவர் அத்துமீறல் | Sexual Harassment Tourist Congress Leader Arrested

இந்நிலையில், மீனாட்சியிடம் ஹோ​ட்ட​ல் உரிமையாள​ரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் ​அப்துல்கனி ராஜா தன்னிடம் அத்துமீறியதாக புகாரளிக்கப்பட்டது. ஹோட்டலுக்கு வந்து உதவி செய்வதாகக் கூறி தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.