வெளிநாட்டில் வைத்து பாலியல் தொல்லை - பிரேமம் புகழ் நிவின் பாலி மீது நடிகை குற்றச்சாட்டு

Kerala Nivin Pauly Tamil Actors
By Karthikraja Sep 03, 2024 03:08 PM GMT
Report

பிரபல நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேமா ஆணைய அறிக்கை

மலையாள சினிமா துறையில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

nivin pauly

மலையாள திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் வெளிப்படையாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகிலும் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என குரல் எழத்தொடங்கியுள்ளது. 

தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை - பரபரப்பை கிளப்பும் சமந்தா

தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை - பரபரப்பை கிளப்பும் சமந்தா

நிவின் பாலி

இந்நிலையில் பிரேமம் படத்தில் நடித்தன் மூலம் பெரிய அளவில் பிரபல,மடைந்த நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். 

nivin pauly

இதனையடுத்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊன்னுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் தயாரிப்பளார் ஏ.கே.சுனில் மற்றும் ஷ்ரேயா என்ற பெண்ணின் பெயரும் இடம்பெறுள்ளது. ஸ்ரேயா என்ற பெண்தான் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த நவம்பர் மாதம் துபாய்க்கு வரவழைத்துள்ளார். அங்கு சொகுசு ஹோட்டலில் வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.