பாலியல் குற்றம் இருந்தால் அரசு வேலை கிடையாது - அதிரடி உத்தரவு!

Sexual harassment Rajasthan
By Vinothini Aug 09, 2023 10:52 AM GMT
Report

ஒரு நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்தால் அவருக்கு அரசு வெளி கிடையாது என்று நரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டு பாலியல்

ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற 14 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் நிலக்கரி உலையில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

sexual-abusers-wont-get-govt-job

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்றும் அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

அரசு வேலை கிடையாது

இந்நிலையில், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "பாலியல் பலாத்காரம், பாலியல் தொடர்பான குற்றவாளிகள், சிறுமிகள் மற்றும் பெண்களைத் துன்புறுத்துபவர்கள் போன்ற நபர்களின் பதிவு காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் என்றும்,

sexual-abusers-wont-get-govt-job

அது அரசாங்க வேலைகளுக்குத் தேவையான நடத்தை சான்றிதழிலும் குறிப்பிடப்படும் என்றும் இது போன்றவர்கள் அரசு வேலைகளில் சேர முடியாது என்றும் மாநில அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.