நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

Sexual harassment
By Nandhini Jun 16, 2022 06:28 AM GMT
Report

மனைவி குளிப்பதை, தனது நண்பன் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் காலித் ஹாசன் (24), இவரது மனைவி (14). யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் எங்கு சென்று வாழ்க்கையை நடத்தலாம் என்று யோசித்துள்ளனர். அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தபரூக் ஹுசேன் (28) என்ற நண்பர் சென்னை குரோம்பேட்டையில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை

இவரை தொடர்பு கொண்டு, என் மனைவியை அழைத்துக் கொண்டு நான் சென்னைக்கு வருவேன் என்று கூறி இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நண்பன் தபரூக் வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர், காலித்தும், தபரூக்கும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன் காலித் ஹாசன் வேலைக்கு வர சொல்லி நண்பனை அழைத்துள்ளார்.

அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தபரூக் ஹுசேன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த 14-வயது சிறுமி குளிப்பதை தபரூக் ஹுசேன் சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அதை அப்பெண்ணிடம் காட்டி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபோல், கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம் | Sexual Abuse Tamilnadu

போலீசில் புகார் 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் வந்துள்ளனர். அப்போது, விசாரணையில், காலித் ஹாசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ளது. மீண்டும் 14 வயது சிறுமியை 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இந்நிலையில், போலீசார் 14-வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி 2-வதாக திருமணம் செய்து கொண்ட காலித் ஹாசன் மற்றும் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தபரூக் ஹுசேன் இவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட 14-வயது சிறுமியை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.