மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - பெற்ற தந்தையே கொடூரம்!

Sri Lanka Sexual harassment POCSO Crime
By Sumathi Dec 14, 2022 12:30 PM GMT
Report

மூன்றரை வயது பெண் குழந்தைக்கு, தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

இலங்கை, யாழ்நகரில் மது போதையில் தனது மூன்றரை வயது பெண் குழந்தையை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - பெற்ற தந்தையே கொடூரம்! | Sexual Abuse Of Three Year Old Child Father

இதையடுத்து குழந்தையின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " கஞ்சா மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான சிறுமியின் தந்தை, மனைவியை பிறருடன் தகாத உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரைணையில் தெரிய வந்துள்ளது.

தந்தை கொடூரம்

அத்துடன் மது போதையில் தனது மூன்றரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தததாக அவர் மீது அவரது மனைவியே புகார் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்

அவர் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரது தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளனர்.