முத்த Selfie: தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்!

Sexual harassment Child Abuse Crime Mumbai
By Sumathi Dec 12, 2022 08:29 AM GMT
Report

முத்தம் கொடுத்த புகைப்படத்தை வைத்து சிறுவன், தோழியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 Selfie

மும்பையைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் தன் தோழியின் பிறந்தநாள் விழாவில் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான். அப்போது அதனை அந்த சிறுவன் செல்பி எடுத்து வைத்திருக்கிறான். அந்த புகைப்படத்தை காட்டி, அதை வெளியிடுவேன் என மிரட்டி, பல முறை தோழியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.

முத்த Selfie: தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்! | Girl Friend Threatening Kissing Selfie In Mumbai

அந்த சிறுமியும் பயத்தில் வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, ஒரு நாள் வெளியில் அழைத்த போது சிறுமி வராததால், அவரின் கல்லூரிக்கே சென்று அவரை தாக்கி இருக்கிறார் சிறுவன்.

பாலியல் வன்கொடுமை

இதை அறிந்த சிறுமியின் நண்பர் ஒருவர் அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவர்கள் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்ததில், உண்மையை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் போலீஸிடம் புகாரளித்தனர்.

அதன் அடிப்படையில், சிறுவன் மீது போக்சோ உட்பட பல வழக்குகள் பதிவு செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.