இதுக்கு இல்லையா ஒரு எண்டு!! தொடரும் செந்தில் பாலாஜியின் சிறைவாசம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியின் சிறை வாசம் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
செந்தில் பாலாஜி
கடந்த ஜூன் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனுவை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மணி சொந்தமான இடங்களிலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் கரூர் வீட்டிலும் வருமானவரி துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, கடந்த 22ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்கள் ஒப்படைத்தது.
இன்று காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவருக்கு 35வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அவரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.