தனுஷூம் ஐஸ்வர்யாவும் சேரவே போவதில்லை - ட்விட்டால் பரபரப்பு!
செல்வராகவன் ட்விட்டால் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சேர போவதில்லையா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் படிக்கும் போதே தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ் தொடர்ந்து
அவர் நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பெற்று, நடிகர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
செல்வராகவன் ட்வீட்
அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்தார். இந்நிலையில், தனுஷின் அண்னன் செல்வராகவன் ட்விட் ஒன்றை செய்துள்ளார். அதில், தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரும், மனைவி கீதாஞ்சலியும் தான் பிரியப் போகிறார்கள் என நினைத்து அறிவுரை வழங்கினார்கள். அதன் பிறகு தான் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு பற்றிய ட்வீட்டுகள் என்பது தெரிய வந்தது.
தம்பியின் வாழ்க்கை பற்றி சொல்வது போன்று தான் தெரிகிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் குழப்பத்திலும் உள்ளனர்.