தனுஷை பார்த்து நான் பலமுறை அழுதுவிட்டேன் - வெளிப்படையாக பேசிய செல்வராகவன்
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டினார் நடிகர் தனுஷ்.
இதனையடுத்து, மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு அனைவருமே கோட்டு - சூட்டு வந்தனர். நடிகைகள் படு மாடர்ன் உடையில் வந்தனர். ஆனால், நடிகர் தனுஷ் மிகவும் எளிமையாக கதர் வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் மிரள வைத்தார்.
இதன் பின், நடைபெற்ற ‘தி கிரே மேன்’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அசத்தினார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
பலமுறை அழுதுவிட்டேன்
இந்நிலையில் தனுஷ் தற்போது மித்திரன் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, ‘வாத்தி’ ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருக்கிறார்.இப்படங்கள் அடுத்தடுத்து திரையில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் செல்வராகவன் பேசுகையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் முழுக்க முழுக்க தனுஷின் படமாகவே இருக்கும். இப்படத்தில் பல காட்சிகளில் தனுஷ் நடிப்பை பார்த்து நான் அழுதுவிட்டேன். கண்டிப்பாக இப்படத்திற்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள் என்றார்.