தமிழகத்திற்கு காவிரி நீரை மத்திய அரசுதான் பெற்றுத் தர வேண்டும் - செல்வப்பெருந்தகை!

Indian National Congress Tamil nadu K. Selvaperunthagai
By Jiyath Jul 15, 2024 07:30 PM GMT
Report

தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை மத்திய அரசுதான் பெற்றுத் தர வேண்டும்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை 

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை பல்லவன் இல்லம் எதிரே ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு கீழே,

தமிழகத்திற்கு காவிரி நீரை மத்திய அரசுதான் பெற்றுத் தர வேண்டும் - செல்வப்பெருந்தகை! | Selvaperunthagai About Cauvery Water Dispute

மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நேர்மையாக, நியாயமாக நடைபெற வேண்டும் - டிடிவி தினகரன்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நேர்மையாக, நியாயமாக நடைபெற வேண்டும் - டிடிவி தினகரன்!

காவிரி நீர் 

அப்போது பேசிய செல்வப்பெருந்தகை “தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரி நீரை மத்திய அரசுதான் பெற்றுத் தர வேண்டும் - செல்வப்பெருந்தகை! | Selvaperunthagai About Cauvery Water Dispute

ஆனால், அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டிய கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை மத்திய அரசுதான் பெற்றுத் தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.