அண்ணாமலையின் அமெரிக்க பயணத்தால் அதிர்ந்த ஜோ பைடன் - செல்வப்பெருந்தகை!
அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "அண்ணாமலை ஜோபைடன் ஆகப் போகிறார். கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் என்று ஊரில் ஒரு பழமொழி உள்ளது.
அதுபோல அண்ணாமலை செயல் உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியவில்லை, வெளிநாடு சென்று என்ன செய்யப் போகிறார். இவரது வருகையை நினைத்து ஜோ பைடன் என்னடா ஒரு ஆர்எஸ்எஸ் கும்பல் இங்கு வருகிறதே என்று அதிர்ந்து போயுள்ளார்.
ஆலோசனை
இவரை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்று ஜோ பைடனும், டிரம்பும் ஆலோசனையில் இறங்கியுள்ளனர். நான் தமிழனாக இருந்தாலும் காவிரி பிரச்சனையில் கன்னட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
நாங்க எங்காவது ஒரு இடத்தில் பேசியிருக்கிறோமா? இல்லை. ஷோபா காராத் தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைத்து சென்றார் என்றார்கள் அதையும் கண்டிக்கவில்லை. வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் அவர் எல்லா இடங்களிலும் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.