திமுகவும் ஆளுநரும் புதுக் காதலர்கள் போல் உள்ளன..Photo Shoot வேற - செல்லூர் ராஜூ கேலி!
திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல் உள்ளனர் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜூ
விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 -ஆவது நினைவு நாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்டமொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல தற்போது இணக்கமாக உள்ளனர்.
விமர்சனம்
முதலமைச்சர் திடீரென பிரதமர் மோடியை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி, மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லுவார்.
ஆனால் தற்போது மாறி இருக்கிறார். மழை நேரத்தில் ஸ்டாலினும் உதயநிதியும் Photo Shoot நடத்துகின்றனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.