அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி..நிரூபிச்சிட்டார் - செல்லூர் ராஜூ தாக்கு!
அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று நிரூபித்துவிட்டார் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
செல்லூர் ராஜூ
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சீரமைப்பு துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது.
தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு துறையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள பிரமலை கள்ளர் சமுதாய மக்கள் பாதிக்கப்படுவர்கள் என்றும் கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள்,
அண்ணாமலை
விடுதிகள் மூடப்படவுள்ளது. என்று தெரிவித்தார்.தொடர்ந்து அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விமர்சனத்திற்கு ஒரு எல்லை வேண்டும் என சொன்ன அண்ணாமலை திமுகவினரை மிக கேவலமாக பேசி உள்ளார்.
கைப்பேசியில் வந்த அழைப்பின் பேரில் அண்ணாமலை கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் ஒடோடி சென்று பங்கேற்றுள்ளார். திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலை தற்போது புகழ்ந்து பேசி , ஆடு சரியாக மாட்டிக் கொண்டது.
பயத்தின் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து முதல்வர் ஸ்டாலின் விழா நடத்தி உள்ளார். சிபிஐ உள்ளிட்ட துறைகளுக்கு பயந்து மத்திய அரசை அழைத்து விழா நடத்தி உள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.