தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்

srilanka world modi biden
By Jon Mar 02, 2021 12:32 PM GMT
Report

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்திச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 28 கிலோ கஞ்சா மூட்டைகள் இன்று காலை (மார்ச் 2) பறிமுதல் செய்யப்பட்டது. காவலர்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கியூ பிரிவு டிஎஸ்பி சிவசங்கரன், ஆய்வாளர் அருள் பிரசாத் உள்ளிட்ட கியூ பிரிவு காவலர்கள் வேதாரண்யம் தோப்புத்துறை கடற்கரை சாலையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது 28 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சென்னை ஐயப்பன் நகர் ராஜ்குமார் (46), அயனாவரம் மகேந்திரன் (24), வில்லிவாக்கம் விக்னேஷ் (26) தங்கையர் பேட்டை சுந்தர் (36) ஆகிய நால்வரையும் நாகை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.