நடராஜனுக்கு வழங்கப்பட்ட அமோக வரவேற்பு: ஷேவாக் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி விட்டு சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று சாதனை படைத்தார்.
இந்த தொடர் முழுவதும் நடராஜனின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது, இந்நிலையில் நேற்று சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. சாரட் வண்டியில் அமரவைக்கப்பட்டு மலர்கள் தூவி, நடராஜனுக்கு மேள தாளத்துடன், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாக, இதை ஷேர் செய்த முன்னாள் அணித்தலைவர் வீரேந்திர ஷேவாக், இதுதான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டு அல்ல. அதற்கும் மேல், அதிகமாகப் பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் உள்ள சொந்த ஊருக்கு நடராஜன் வந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இது நம்ப முடியாத வகையில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Swagat nahi karoge ?
— Virender Sehwag (@virendersehwag) January 21, 2021
This is India. Here cricket is not just a game. It is so much more. Natarajan getting a grand welcome upon his arrival at his Chinnappampatti village in Salem district. What an incredible story.#Cricket pic.twitter.com/hjZ7kReCub