எகிறும் வாக்கு சதவீதம்; பல இடங்களில் 3-வது இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும் நாதக?
தமிழகத்தின் பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அதில் கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 7 சதவீத வாக்குகளை நாதக பெற்றது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படுகிறது.
மூன்றாவது இடம்
அதனை இந்த மக்களவை தேர்தலில் பெற்று அங்கீகாரத்தைப் பெற நாதக முயன்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நிலவரப்படி, நாகப்பட்டினம், திருச்சி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

மேலும், பெரும்பான்மையான இடங்களில் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இதனால் அக்கட்சியின் வாக்கு சதவீதம் கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil