அரசியல் களத்தில் அனல் தெறிக்க பேசிய விஜய் - சீமான் கொடுத்த எச்சரிக்கை!

Vijay Tamil nadu Seeman Thamizhaga Vetri Kazhagam
By Swetha Oct 28, 2024 03:04 AM GMT
Report

அரசியல் குறித்து விஜய்க்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜய்

இது தொடர்பாக நிருபர்களிடம் சீமான் கூறியதாவது, விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்து கொள்ள வேண்டும். அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்து போகவில்லை. நான் கூறுவது என் நீண்ட கால இன வரலாறு.

அரசியல் களத்தில் அனல் தெறிக்க பேசிய விஜய் - சீமான் கொடுத்த எச்சரிக்கை! | Seeman Warns Vijay About Political Entry

இங்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு என்ன என்பது. திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் நேயர்கள்.கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன்.

வரலாறு, காலம் எனக்கு இந்த பணியை கொடுத்தது. காரணம் என் இனத்தின் மரணம். எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். அதை செய்கிறேன்.திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் சொன்னால்,

விஜயின் முதல் அரசியல் மாநாடு...சீமான் சொன்ன அந்த பாயிண்ட் - என்ன தெரியுமா?

விஜயின் முதல் அரசியல் மாநாடு...சீமான் சொன்ன அந்த பாயிண்ட் - என்ன தெரியுமா?

சீமான் 

அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. அது வேறு. இது வேறு. இது எனது நாடு. எனது தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்த போது யாரும் எதிர்த்து பேசவில்லை.

அரசியல் களத்தில் அனல் தெறிக்க பேசிய விஜய் - சீமான் கொடுத்த எச்சரிக்கை! | Seeman Warns Vijay About Political Entry

நாங்கள் தமிழ் தேசம்பெயர் வைத்த போது பாசிசம், பிரிவினைவாதம் என சொல்கிறீர்கள். இது ஏற்புடையது அல்ல. மேலும், நான் விரும்பி அரசியல் வரவில்லை, தள்ளிவிடப்பட்டேன். ஆனால் தம்பி விஜய் விரும்பி அரசியல் வந்திருக்கிறார்.

எனவே நான் தட்டி கொடுத்து வாழ்த்துகிறேன். இருப்பினும் அரசியல் என்பது கொஞ்சி கடிக்கும் மீன்கள் நிறைந்த குள்மல்ல, கொடூர முதலைகள் நிறைந்தது என விஜயை எச்சரித்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.