களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுறதுதான் காமெடியா இருக்கு - சீமான் தாக்கு
களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக இருப்பதாக சீமான் விஜய்யை சாடியுள்ளார்.
விஜய் பேச்சு
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது.

உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.
சீமான் சாடல்
களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.களத்திற்கு வராதவர் களத்தை பற்றி பேசுவதா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடிில் இருந்து 5.43 கோடியாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.