சைக்கிள், மாம்பழம் வருது - எனக்கு மட்டும் ஏன் சின்னம் கொடுக்கல..அவ்ளோ பயம் - சீமான்
பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சி போட்டியிடாத இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியதிற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கரும்பு விவசாயி சின்னம்
நாம் தமிழர் கட்சி தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை முன்வைத்து தான் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. ஆனால், இந்த தேர்தலில் அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சி கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.
சீமானும் தொடர்ந்து இதற்காக போராடி பார்த்த நிலையிலும், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சி தமிழகக்தில் 17 இடங்களில் போட்டியிடுகிறது.
அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் பல சுயேட்சைகளுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை முன்வைத்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அவ்ளோ பயம்
மத்திய சென்னை தொகுதி நா.த.க வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் பிரச்சாரம் செய்த போது சீமான் பேசியது வருமாறு,
என்ன பாத்தா பயம் நேர்மையாக தேர்தல் நடக்கிறதா..? சரி என்னோட சின்னம் எடுத்துட்ட, சரி first come first serve சரி சின்னம் கொடுத்துட்ட, விட்டுட்டேன். அப்போ ஜி.கே.வாசனும், டிடிவி'யும் முதலிலேயே வரலையே. உன்னோட கூட்டணி வெச்சதும் அவுங்களுக்கு எப்படி சின்னம் சரியா வருது.
அய்யா , ஜி.கே.வாசன், டிடிவி அங்கீகரிக்கப்படாத கட்சி தானா. நாங்களும் 7 விழுக்காடு வாக்கு வாங்கிட்டோம். இன்னும் ஒரு விழுக்காடு வாங்குவதற்கு முன்னாடி கழுத்த நெரிச்சிட்ட. இப்போ அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு சின்னம் ஒதுக்குன...சரி.
எனக்கு சின்னம் ஒதுக்கல. எனக்கு சின்னம் கொடுக்காமல் சுயேட்சைக்கு எதுக்கு ஒதுக்குன. எனக்கு விழும் வாக்கை குறைக்க நினைக்கிறீர்கள். என்ன பாத்தா அவ்ளோ பயம்.