நீ எடுத்திருக்கிறது போலீஸ் ட்ரைனிங்...நா எடுத்தது போராளி ட்ரைனிங் - சவால் விடும் சீமான்..!
கடந்த சில நாட்களாக நாம் தமிழர் சீமான் மற்றும் பாஜகவின் அண்ணாமலை ஆகியோருக்கு இடையே கடும் வார்த்தை மோதல் நடந்து வருகிறது.
நாம் தமிழர் போட்டி
40 தொகுதிகளிலும் 20 ஆண்கள், 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எப்போதும் போல இப்போதும் கூட்டணி இல்லாமல் தேர்தலில் களமிறங்கியுள்ளார் சீமான்.
தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவருக்கும் தமிழக பாஜக தலைவரும் கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகின்றது.
சின்னம் தொடர்பாக எழுந்த இந்த மோதல், தனிமனித தாக்குதலில் தற்போது தீவிரமடைந்துள்ளது. இருவரும் சரமாரியாக ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனம் வைக்க துவங்கி விட்டனர்.
நீ போலீஸ்..நா போராளி
சென்னை மயிலாப்பூரில் நேற்று (3.04.24) சீமான் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியது வருமாறு, நாங்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் தமிழக மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன். ஆகச்சிறந்த பயிற்சியுடன் நெய்தல் படை அமைப்பேன்.
இதனை தம்பி அண்ணாமலையிடமும் கூட கூறினேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் ட்ரைனிங்.நான் எடுத்திருப்பது போராளி ட்ரைனிங். வா மோதிப் வா..? என் முன்னாடி நீ ரொம்ப சாதாரணம்.
உங்களுக்காக வாக்கு கேட்டு பிரதமர் வருவாரு, home minister வருவாரு, finance minister வருவாரு, எனக்கு எல்லாமே நான் தான். அப்போ நான் தான கெத்து.