வேட்பாளர் தேர்வு - ஜாதி கேட்டு தான் நடக்குது..? அதிரவைத்த சீமானின் பதில்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சில மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள்..
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. விவசாயி சின்னம் கிடைக்குமா? என்ற சந்தேகம் நீடித்து வரும் நிலையிலும் தொடர்ந்து தேர்தலை நோக்கி சீமானும் நாம் தமிழரும் நகர்ந்து வருகின்றது.
தேர்தல் வேட்பாளர்களை ஜாதியை வைத்து தேர்ந்தெடுக்கிறீர்களா? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சீமான் சற்று கடினமாகவே பதிலளித்துள்ளார்.
யார் ஜாதி பார்ப்பதில்லை
ஆதித்தமிழ் குடிகளுக்கு இது வரை அதிகாரத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளதா..? என்று கேள்வியை முன்வைத்த சீமான், அரசியல் அங்கீகாரமே இல்லாத ஒரு சமூகத்தை சேர்ந்தவர் நிறுத்துவதில் என்ன தவறு என்று வினவினார்.
மேலும், புறக்கணிப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பது தான் இடஒதுக்கீடு என்றும் அது தானே நாடு என்று வினவினார்.