இந்தியாவிலேயே முதல்முறையாக 60 அடி ஆழ கடலுக்குள் சென்று திருமணம் செய்து அசத்திய தம்பதி

husband wife lover
By Jon Feb 02, 2021 11:57 AM GMT
Report

ஆழ்கடலுக்குள் திருமணம் செய்து தம்பதியினர் அசத்தி காட்டியுள்ளனர். சென்னையில் ஆழ்கடலுக்குள் இந்துமுறைப்படி நடந்த இந்த திருமணம் இந்தியாவில் இதுதான் முதல்முறை என்பதால் மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது.

இந்த திருமணம் 60 அடி ஆழ கடலுக்குள் சென்று அங்கே தோரணம் கட்டி, இந்துமுறைப்படி நடந்துள்ளது. சென்னை திருவான்மியூர் கடலில்தான் இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை (29)க்கும், கோவையைச் சேர்ந்த ஸ்வேதா (26)வும் சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த 12 வருடங்களாக ஆழ்கடலில் பயிற்சி எடுத்து வந்தவர் சின்னதுரை. அதனால் தனது திருமணத்தினை ஆழ்கடலுக்குள் நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

ஸ்வேதாவும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தார். ஆனால் இந்த முடிவிற்கு உறவினர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் எல்லோரையும் பிடிவாதமாக இருந்து சம்மதித்து வைத்துள்ளார் சின்னதுரை.

இந்தியாவிலேயே முதல்முறையாக 60 அடி ஆழ கடலுக்குள் சென்று திருமணம் செய்து அசத்திய தம்பதி | Sea India First Time Wedding

ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் உதவியுடன் நேற்று காலை 6.30 மணிக்கு மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து, ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்டு நீலாங்கரை கடற்கரைக்கு சென்றார்கள்.

நண்பர்களும் உடன் வந்தார்கள். மூன்று கிலோ மீட்டர் தூரம் கடலில் போட்டில் சென்று, பின்னர் ஆழ்கடலுக்குள் 60 அடி ஆழத்திற்கு சென்றார்கள். அங்கேயே தோரணம் கட்டி அசத்தினார்கள். 40 நிமிடங்கள் இந்த திருமணம் நடந்தது.

கடலுக்குள் மீன், ஆமைகளுக்கு நடுவே திருமணம் செய்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று மணமகள் ஸ்வேதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கடலை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி திருமணம் செய்ததாக சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலுக்குள் இந்துமுறைப்படி திருமணம் நடந்துள்ளது. இதுதான் இந்தியாவில் முதல்முறை என்பதால் அனைவர் மத்தியிலும் மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது.