இனி ரொம்ப மோசமாக இருக்கும்; பூமி குறித்த ஆய்வில் பகீர் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Heat wave Weather World
By Sumathi Oct 09, 2024 05:00 PM GMT
Report

பூமி வெப்பமடைதல் குறித்து மனித குலத்தை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமி வெப்பமடைதல்

டைனோசர்களின் காலத்தில் பூமி எவ்வளவு சூடாக இருந்தது, அதன்பின்னர் அது எவ்வளவு வெப்பமடைந்துள்ளது என்று கடலுக்கு அடியில் இருந்து ஒரு படிமத்தை தோண்டி எடுத்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

global warming

இதுவரை உலகம் மொத்தம் நான்கு வகையான பருவநிலை மாற்றங்களைக் கண்டுள்ளது. அவற்றில் 'ஹாட் ஹவுஸ்', 'வார்ம் ஹவுஸ்', 'கூல் ஹவுஸ்' மற்றும் 'ஐஸ் ஹவுஸ்' ஆகியவை அடங்கும்.

பூமி நீண்ட காலமாக பனிக்கட்டி மட்டத்தில் இருந்தது, பின்னர் அது பசுமை இல்லத்தின் அதிகப்படியான வளர்ச்சியால் படிப்படியாக ஒரு சூடான பகுதியாக மாறியுள்ளது.

இன்னும் 200 வருஷம் தான்.. பூமி வாழவே தகுதி இல்லாத இடமா மாறும்? ஆய்வில் தகவல்!

இன்னும் 200 வருஷம் தான்.. பூமி வாழவே தகுதி இல்லாத இடமா மாறும்? ஆய்வில் தகவல்!

மோசமான நிலை

பசுமை இல்லத்தின் தாக்கத்தால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் விகிதம் இதே விகிதத்தில் தொடர்ந்தால், பூமியின் வெப்பநிலை சில நூற்றாண்டுகளுக்குள், அதாவது 2300 ஆம் ஆண்டுக்குள் மோசமான நிலைமையை அடையலாம்.

இனி ரொம்ப மோசமாக இருக்கும்; பூமி குறித்த ஆய்வில் பகீர் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! | Scientists Warning Global Warming Issues To Humans

பூமியில் இருந்து வெளியாகும் வாயுக்களின் அளவைக் குறைக்காத வரையில் இந்த வெப்பமயமாதலை நிறுத்த முடியாது. இன்னும் சில நூற்றாண்டுகளுக்குள் பூமியின் வெப்பம் அதிகரித்து மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும். விலங்குகளின் உலகம் படிப்படியாக அழிந்து போகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.