பள்ளிகளுக்கு நவம்பர் 10ம் தேதி வரை விடுமுறை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
வரும் 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு
தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டி வருகிறது. டெல்லியில் 3-வது நாளாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக உள்ளது.
இன்று காலை ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 460-ஆக இருந்தது. பல இடங்களில் 400-க்கும் மேல் இருந்தது. இதனால் டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடுமுறை
இந்நிலையில், அந்த அறிவிப்பில் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.