சாலையோரம் மயங்கிக் கிடந்த 16 வயது மாணவி - அருகே சென்று பார்த்ததில் கொடுமை!

Salem
By Sumathi Oct 05, 2024 06:59 AM GMT
Report

பள்ளி மாணவி ஒருவர் மது போதையில் மயங்கிக் கிடந்துள்ளார்.

மது போதை

சேலம், அழகாபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனே, பதறிப்போன பொதுமக்கள் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சாலையோரம் மயங்கிக் கிடந்த 16 வயது மாணவி - அருகே சென்று பார்த்ததில் கொடுமை! | Schoolgirl Unconscious Under Liquor Salem

பிறகு அவர்களை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், மாணவி வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல் பரவியது.

தலைக்கேறிய போதை..மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த சம்பவம்!

தலைக்கேறிய போதை..மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த சம்பவம்!

தீவிர விசாரணை

தொடர்ந்து, போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருவதும், மதுபோதையில் மயங்கிக் கிடந்ததும் தெரியவந்தது.

சாலையோரம் மயங்கிக் கிடந்த 16 வயது மாணவி - அருகே சென்று பார்த்ததில் கொடுமை! | Schoolgirl Unconscious Under Liquor Salem

மாணவியை 2 பேர் பைக்கில் அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றுள்ளனர். மேலும், மருத்துவ பரிசோதனையில் மாணவி வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த மாணவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினாரா? அல்லது யாராவது அவருக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.