நீங்கள் இந்தியாவின் அடிமைகள்.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள், முஸ்லீம் மாணவர்களை திட்டிய ஆசிரியர் - கொதித்த பெற்றோர்கள்!
ஆசிரியர் ஒருவர் முஸ்லீம் மாணவர்களை பார்த்து திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திட்டிய ஆசிரியர்
கர்நாடகா மாநிலம், பெங்களூரில், ஷிமோகா நகரின் அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு உருது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மஞ்சுளா. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவரும் இஸ்லாமிய மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்.
அப்பொழுது மாணவர்கள் சேட்டைகள் செய்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆசிரியை, இஸ்லாமிய மாணவர்களை பார்த்து, "நீங்கள் எல்லாம் இந்தியாவின் அடிமைகள், வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
பணியிடை மாற்றம்
இந்நிலையில், ஆசிரியை திட்டியதால் மாணவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் சென்று கூறியுள்ளனர். ஆசிரியை சொன்ன வார்த்தைகளால் கடுப்பான பெற்றோருக்கு திரண்டு பள்ளிக்கு வந்து அண்டனஹ ஆசிரியை மணீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனால் சற்று நேரம் பள்ளியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் கோரிக்கை விடுததால், சிமோகா மாவட்ட கல்வித்துறை, ஆசிரியை மஞ்சுளாவை பணியிட மாற்றம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளார்.