தந்தை பேசாமல் இருந்ததால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு
தந்தை பேசாமல் இருந்ததால் பள்ளி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பம்மல் கிருஷ்ணா நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
இவரது மகள் ஜனனி(17) அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி, அடையாறில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தின் ஆன்லைன் வகுப்பில், மகள் ஜனனியை விநாயகம் சேர்த்துள்ளார். ஆனால் ஜனனி சரியாக படிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் வருத்தமடைந்த விநாயகம் ஜனனியிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் விநாயகம் மற்றும் குடும்பத்தினர், எழுந்து பார்த்தபோது, ஜனனி, தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜனனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகம் சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார்.