இன்ஸ்டாவில் யார் கெத்து? நடுரோட்டில் அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - வைரல் காட்சி
2 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா மோகம்
திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து அதில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளனர்.
அதேபோல் கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் கேங்க் ஃபார்ம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளனர். இதில் 2 குழுக்களுக்கும் யார் பிரபலம் என போட்டி இருந்துள்ளது.
மாணவிகள் அட்டகாசம்
இது முற்றிய நிலையில், கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் கேங்க் ஃபார்ம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். அங்கு பள்ளி முன்பு சென்று அந்த மாணவிகளிடம் சாலையிலேயே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சாலை முழுவதும் மாணவிகளின் அடிதடியை பார்த்து பொதுமக்கள் திகைத்துப்போயினர். அவர்களில் ஒரு சில பெரியவர்கள் மட்டும் சண்டையை தடுக்க முற்பட்டுள்ளனர்.
உடனே இதுகுறித்து பள்ளி சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.