மது போதையில் அர்ச்சகர்கள் நடனம்; பெண்களிடம் அத்துமீறல் - அதிர்ச்சி வீடியோ

Viral Video Virudhunagar
By Sumathi Jun 26, 2025 05:05 AM GMT
Report

அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ச்சகர்கள் அத்துமீறல்

ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரபலம்.

srivilliputhur

மேலும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு இந்த கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள்,

மதுபோதையில் கோயில் வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் ஆபாச நடனமாடியது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோயிலுக்கு வரும் பெண்களிடம் விபூதி அடித்து விளையாடுவது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட நபர் - கோவிலில் அழுது துடித்த மனைவி

4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட நபர் - கோவிலில் அழுது துடித்த மனைவி

அதிர்ச்சி வீடியோ

இதனையடுத்து ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. தற்போது உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

மது போதையில் அர்ச்சகர்கள் நடனம்; பெண்களிடம் அத்துமீறல் - அதிர்ச்சி வீடியோ | 4 Priests Dance After Drinking Alcohol In Srivilli

அவர்கள் கோயில் பூஜை விவகாரங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் சுந்தர் மீது கும்பாபிஷேகத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.