மனைவியின் டார்ச்சர் தாங்கல.. என்னை கருணை கொலை செய்யுங்க - கதறும் இளைஞர்

Madhya Pradesh
By Sumathi Jun 25, 2025 01:30 PM GMT
Report

மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாத கணவர், கருணை கொலை செய்துவிடுமாறு கோரியுள்ளார்.

மனைவியின் டார்ச்சர்

மத்திய பிரதேசம், மஹால் சராய் புரணி என்ற இடத்தில் வசித்து வருபவர் ஷாகீர் கான். இவரது மனைவி பர்சானா. இந்நிலையில் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மனைவியின் டார்ச்சர் தாங்கல.. என்னை கருணை கொலை செய்யுங்க - கதறும் இளைஞர் | Man Request Euthanasia For Wife Torture Mp

மேலும், வரதட்சணை புகார் செய்து சிறையில் அடைப்பதாக மனைவி பர்சானா தனது குடும்பத்துடன் சேர்ந்து கணவனை, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மணிக்கட்டில் உள்ள ரத்த குழாயை வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து விரக்தியடைந்த ஷாகீர் கான் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து அவர் பொதுமக்கள் குறைகேட்பு அதிகாரியிடம்,

கணவன் ஆதங்கம்

‛‛நான் எனது வீட்டில் இருப்பதை பாதுகாப்பாக நினைக்கவில்லை. எனது மனைவி மிரட்டல் குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் மீது போலியான வரதட்சணை புகார் அளிப்பதாக மனைவி மிரட்டுகிறார். அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும்.

சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் - நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்!

சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் - நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்!

நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். ஆனால் காப்பாற்றிவிட்டனர். இப்போது என்னை என் மனைவியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் நாட்டில் பல்வேறு குற்றச்சம்பவங்களை பார்க்கிறேன். அதுபோல் என் வாழ்க்கையிலும் நடந்து விடும் என்ற அச்சம் உள்ளது.

என் மனைவி என்னை கொன்று டிரம்மில் அடைத்து வைக்கலாம். இல்லாவிட்டால் பாலைவனத்தில் கூட என்னை வீசலாம். இதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கருணை கொலை செய்துவிடுங்கள்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கவனம் பெற்று பேசுபொருளாகியுள்ளது.